மூட நம்பிக்கை பைத்தியங்கள்

மூட நம்பிக்கை பைத்தியங்கள்!!!

எந்த ஒரு கடவுளும், நீ உன்னை வருத்திக் கொள் அப்போது தான் நான் உனக்கு காட்சி கொடுப்பேன்,வரம் கொடுப்பேன் என்று கூறியதில்லை.


நாம் தான் பக்தி என்னும் பித்து பிடித்து உடலில் அலகு குத்துவது,தீ மிதிப்பது,காவடி சுமப்பது என வித விதமான தண்டனைகளை செய்து நம்மை நாமே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறோம்.

எது எப்படியோ போகட்டும் உன் உடம்பு அதை வருத்திக் கொள்,உடலை கூறு போட்டு கூட உன் கடவுளுக்குக் கொடு.ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் பிள்ளைகளுக்கு உடலில் அலகு குத்தி அவர்களை புண்படுத்துவதற்க்கு உனக்கு மட்டுமல்ல உன் கடவுளுக்கே உரிமை இல்லை.




உண்மையை சொல்லப்போனால் நீ வேண்டும் கடவுள் உண்மையில் இருந்தால் கூட உன்னை தான் தண்டிப்பார்.

தயவு செய்து பக்தியை மூளைக்கு மட்டும் கொண்டு சென்று வழிபாட்டோடு நிறுத்திக்கொள் மனதோடு கலந்து உன் உடலை வருத்திக்கொள்ளாதே!!!